சாமீ காப்பாத்து


அண்ணா நகர்
மாலையின் நெரிசல்
அணை கட்டி நகர விடாத வண்டிகள்
கீங்கீங்கீங் கீங் கீஈஈங்
வொயங் வொயங் என்று ஓயாமல்
அலறிக் கொண்டே
ஒரு 108 ஆம்புலன்ஸ்
ஒலிபெருக்கியில் மங்கள இசையோடு
அலங்கார விளக்குகள் மின்ன
விசேஷ பூஜை சிறப்புற நிகழும்
சாலையோரக் கோவிலுக்கு எதிர்த்தாற்போலவே
தரிசனத்திற்குக் காத்திருப்பது போல்
நகராமல் உறைந்து நிற்கிறது.
அதுனுள் ஒரு பெண்
மௌனமாகப்
பிரார்த்தித்துக் கொண்டிருக்கலாம் !

- மதி

படம் : நன்றி : Niels Sienaert

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..