ஒருமையின் கணம்




    முதல் துளி வீழ்கையில்
    நிமித்தமாய் நிமிர்ந்து
    கண்ணுக்குள் மழையைக்
    களவாண்டு கொள்வது போல்
    மிகச் சரியான தருணத்தில்
    நிகழ வேண்டும்
    அவளுடனான பேச்சில்
    ஒருமை புகுதல்.
    நீங்க என்பது
    நீ ஆவது
    இமைக்கணம் முந்தினாலோ
    இல்லை பிந்தினாலோ
    நட்பென்னும் சாபத்தோடே
    நனையாமலேயே முழுக   வேண்டியதுதான்.


    - மதி

    (படம் : நன்றி : tsaiproject)

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..