கடவுள்


கடவுள் யார் ?
கடவுள் என்ன ?
கடவுள் எது ?
மனிதனைப் படைத்த தாயா ?
மனிதன் உயிர் கொடுத்த சேயா ?
...............................
குழப்பம் வேண்டாம்.

உண்டென்று சொல்வோர்
உறுதியாகச் சொல்லுங்கள்
இல்லையென்போர்
இம்மியளவும் பிசக வேண்டாம் .

வடிவங்கள் வேண்டுமா ?
வைத்துக் கொள்ளுங்கள்.
வெறும் பொய்தானா ?
விட்டுத் தள்ளுங்கள் .
மாலைகள் தேவையா ?
மனமாரச் சாத்துங்கள் .
மாய வலையா ?
கிழித்து வீசுங்கள் .
.........................

நம்பிக்கை நம் பிறப்புரிமை ,
சந்தேகமில்லை
நாம் தனித்தனியாகத் தான்
பிறந்தோம் என்பதும்
நினைவிருக்கட்டும் .

பூசையறையோ குப்பைத் தொட்டியோ
கடவுளை உங்கள் வீட்டிலேயே
வைத்துக் கொள்ளுங்கள் .
..............................

கள்ளமில்லாக் குழந்தையின்
கவி மழலைப் பேச்சு ,
சோதிதனில் கலந்துவிட்டால்
சொப்பனங்கள் தோற்கடிக்கும் நட்புலகம் ,
அவ்வப்பொழுது அசைத்துப் பார்க்கும்
கைகூடா எண்ணங்கள் ,
வாடிக்கைக் கவலைகளின்
வடிகாலாய் இயற்கை ,
பிறவிப் பொருளுணர்த்தும்
ஒரு பாசப் பார்வை ,
கொடுத்துப் பெறும் அன்பு
.........
வாழ்க்கை வாழ்வதற்கே !
வாதங்கள் வீண் வேலை !
..........................

நிலையான பரம்பொருள்
அமைதி
......
கடவுள் வடிவானாலும் சரி
கடவுளே பொய்யென்றாலும் சரி !
....................................

குழம்ப வேண்டாம்
குழப்ப வேண்டாம்
பூசையறையோ
குப்பைத் தொட்டியோ
கடவுள் உங்கள்
வீட்டோடேயே இருக்கட்டும் .

கருத்துகள்

  1. பெயரில்லாமார்ச் 14, 2009

    you have talked about both the freedom of thought and the age old unanswered question of god in a very beautiful way. as you say, its best to keep our opinion of god to our self and just go ahed and live life.

    but i feel that 'kuzhandaiyin mazhalai', 'anbu' etc as the meaning of life a bit cliched. but like all cliches, these too are true. way to go gs. love this one. :)

    பதிலளிநீக்கு
  2. kadavulai thedi engeyum poga vendiydhillai... kadavulai avaravarkullaga thame unaralam...
    kadavul - kada + ul..
    find the god within you...
    as you said
    'ANBE SIVAM'

    பதிலளிநீக்கு
  3. poojikka arivirku viruppam illai...
    kuppai endru veliyil veesa manam oppavillai..
    veethiyil vittu eriyayha antha ondrai thedukiraen...
    thedivittaen endra nimmathi kidaikkum endru...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..