ஜே ஜே : சில குறிப்புகள்


சமீபத்தில் நான் வாசித்த - நிறைய யோசித்த புத்தகம். சு.ரா வே எனக்கு இதன் மூலம் தான் அறிமுகம் ஆகிறார். அறிமுகம் ஆகையிலேயே புத்தகம் முழுக்க ஒரு எழுத்தாளனை அறிமுகம் செய்து வைக்கிறார் ..... அந்த கற்பனை எழுத்தாளன் சு.ரா தான் என்று அழுத்தமாகத் தோன்றுவதால் , தன்னைத்தானே அறிமுகப்படுத்தி ஒரு புத்தகத்தை முன்வைக்கும் வித்தியாசமான அறிமுகம்.

'ஜே ஜே' என்ற தமிழ்ப்படத்தில் ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் இப்புத்தகம் நடித்துள்ளது. ( படம் பார்க்காதோர் பார்க்கலாம் - நேரமும் டிவிடியும் கிடைத்தால்) இப்பொழுது புத்தகம் வாசித்த பிறகு இது அந்தப் படத்தில் ஆற்றியுள்ள வெட்டி வேலை புரியும் .

ஜோசஃப் ஜேம்ஸ் - சுருக்கமாக ஜே ஜே - மலையாளத்தில் எழுதுபவர். தன் உள்ளொளியைக் காண எழுத்தை ஆண்டவர் என்று சு ரா இவரை அறிமுகப்படுத்துகிறார். நிஜம் தான். எப்பொழுதும் மனதைப் பிறாண்டும் கேள்விகளுக்கு மருந்து போட்டுக் கொண்டே முடிந்து போன ஒரு வாழ்க்கை ஜே ஜேவுடையது.

இந்த உள்ளொளி, சுயம் இவையெல்லாம் தருக்க மேடைகளில் இருந்து தாவிக்குதித்து மனசின் ஆழம் காண ஆரம்பித்துவிட்டால் மூச்சுத் திணறத்தான் செய்கிறது. ஆனால் குழப்பங்கள் என்றும் ஓய்வதேயில்லை. நாம் பழக்கங்களில் வாழ்கிறோம். நல்லவை என்று சொல்லித்தரப்பட்டவையே நல்லவை . கேள்விகள் கேட்கச் சொல்லித்தரப்படவில்லை . ஏன் ?

சில 'நல்லவைகள்' சொல்லித்தரப்படும்போதே 'நல்லவனாய் இராதே' என்றும் அறிவுறுத்தப்படுகின்றன. உண்மையாக வாழ்வதும் அப்படியே. கண் முன்னே ஒருவன் ஒப்பனை பூணுகையில் அவன் முகத்தில் தண்ணீரை விட்டடிப்பவன் தீண்டத்தகாதவன். அவரவர்க்கும் அவரவரின் ஒப்பனைகள் . அவரவரின் முகமூடிகள். முகமூடிகள் அற்றவன் நிராயுதபாணியாகிறான். ஏன் ?

மேன்மையின் பாதைகள் பரிபூரணத்திற்கு இட்டுச் செல்வதாகச் சொல்லித்தரப்படுகிறது. பாதை தெரிகிறது. பயணிக்கிறோம். பயணத்தை முடித்த பரிபூரணன் ஒருவன் கூட இன்னும் முகம் காட்ட வில்லையே . ஏன் ?

பயணிப்போரால் பரிபூரணத்தை அடைய முடியாதென்றும் பிறகு சொல்லித்தரப்படுகிறது. ஏன் ?

WE HAVE LEARNT TO ADJUST . WHY ?

'ஏன்?'கள் எக்கச்சக்கம். உள்ளொளி, ஞானம் , சுயம் புரிதல், தேடல் , இவையெல்லாம் எத்தனை 'ஏன்?'களுக்கு விடை காண்கிறோம் அல்லது எத்தனை 'ஏன்?'களை எழுப்புகிறோம் என்பதைப் பொறுத்தவை .

................................................................................

சில பெண்களிடம் மட்டும் கண்ணைப் பார்த்துப் பேச முடியவில்லை . ஏன் ?
(இந்த ஏன்? மேலே பேசியதன் பாதிப்பல்ல . ஒரு முறை வாழ்வில் நடந்த சுவாரசியம் )

ஒரு முறை நண்பர்கள் இந்த ஏனுக்குத்தான் விடை காண முயன்றோம். கண்டவை : 1. குற்ற உணர்வு . 2. காதல்

பெண் என்றல்ல , யாராயிருப்பினும் குற்ற உணர்ச்சி கண்களைப் பார்க்க விடாது. விளக்கங்கள் தேவையில்லை. அனைவரும் குற்றம் புரிந்திருப்போம்.

காதல் கூட ஒரு வகை குற்ற உணர்வாக இருக்கும் போதுதான் இப்படிச் செய்கிறது. 'அடியே ! எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது . நான் உன்னைக் காதலிக்கிறேன். ஆனால் இன்னும் சொல்லாமல் சாகிறேனே' என்னும் போதுதான் காதலியின் கண்கள் நிலவின் பின்னால் ஒளிந்துகொள்ளும். கைகூடிய காதல் நான்கு கண்களுக்கும் ஒற்றைக் கனவினைத் தரவல்லது.

ஆக குத்துமதிப்பாக ஒரு ஏனுக்கு விடை கண்டோம்.
(அல்லது அவள் கண்கள் காணச் சகியாதபடிக்குக் கேவலமாக இருக்கலாம் )

:-)

கருத்துகள்

  1. HAVE YOU SEEN THE HINDI FILM "A WEDNESDAY", WHAT I GOT FROM THAT MOVIE IS , WE ARE INTERESTED ONLY WITH QUESTIONS AND NOT WITH ANSWERS

    பதிலளிநீக்கு
  2. i ve not seen the movie yet . heard about it . will see if given a chance soon ..
    a man is defined by the questions that he can ask . i always believe in this ..

    பதிலளிநீக்கு
  3. ah...perfect.we ask questions, try to find the answers, then mostly give up...nd in the end we end up forgettin how to ask the qns. kozhandai uh irundappo kelvi kekara naama valara valara amiadi aidrom. mayb cuz the qns get complicated and ther is no grown ups around to appease us with an answer ;)

    பதிலளிநீக்கு
  4. chennai thamizhanஜூன் 22, 2010

    machan i think u really understand ur friends who also searched the answer for the aen da.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..